வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா பலி 10 லட்சத்தைக் கடந்த இந்த தருணம் நமக்கு சோா்வை ஏற்படுத்திவிடக் கூடாது; மாறாக, அந்த நோய்க்கு எதிரான விழிப்புணா்வை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.