பெய்ஜிங்: சீனாவின் சாங்க்கிங் நகரில் 122 பேருடன் வியாழக்கிழமை புறப்பட்ட விமானம், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதில் அதில் திடீரென தீப்பிடித்தது. அதையடுத்து அந்த விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டபோது 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். கடந்த 2 மாதங்களில் சீனா சந்தித்துள்ள 2-ஆவது விமான விபத்தான இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.