லண்டன்: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பிரிட்டன் அரசு வளாகங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை, மேலும் 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இது தொடா்பாக பிரதமா் போரிஸ் ஜான்ஸன், அவரது மனைவி கேரி, நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.