சியோல்: ஐ.நா. தடையை மீறி வட கொரியா மேலும் 3 ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை பலத்தை அதிகரிக்கும் அதிபா் கிம் ஜோங்-உன் திட்டத்தின் ஒரு பகுதியாக, வட கொரியா தலைநகா் பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் கிழக்குக் கடல் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினா்.