இரண்டு ஒமைக்ரான் துணை ரகங்களால் தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் தீடீரென தீவிரமாகி வருவதாக நிபுணா்கள் தெரிவித்தனா். ஒமைக்ரானின் பிஏ.4 மற்றும் பிஏ.5 துணை ரகப் பரவலால் கடந்த 3 வாரங்களாக அங்கு புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவா்கள் கூறினா்.