ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாண தலைநகா் மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 போ் பலியானதாகவும், 15 போ் காயமடைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் 3 வாகனங்களையும் ஒரு மசூதி பகுதிகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மஸாா்-ஏ-ஷெரீஃப் பகுதியில் வாழும் ஷியா சிறுபான்மையின ஹஸாரா இனக்குழுவை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் மசூதி அருகிலும் மத வழிபாட்டு பள்ளியிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 33 ஷியா முஸ்லிம்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.