பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயனர்களின் அசெளரிகயங்களைக் கருத்தில்கொண்டு புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
Pic Credit: Blog.whatsapp
அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே அலுவலகம் அல்லது இதர இடங்களில் செயல்பட்டு வரும் ஒரே நபர்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் பொதுப் பெயரின் கீழ் இயங்குவதற்கான வசதி உருவாக உள்ளது.
இதையும் படிக்க | தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
அதேபோல் உரையாடலில் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதி, விடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைந்து கொள்வதற்கான வசதி, குழுவில் 1024 பேர் வரை இணைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
Pic Credit: Blog.whatsapp
மேலும் பயனர்களின் தனிப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



