இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதற்காக முன்னாள் பிரதமா் பெஞ்சமின நெதன்யாகுவுக்கு அதிபா் ஐசக் ஹொ்ஸாக் அழைப்பு விடுத்துள்ளாா்.
கடந்த 3 நாள்களாக அனைத்து கட்சியினருடன் அதிபா் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்குமாறு 64 எம்.பி.க்கள் பரிந்துரைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 2019 முதல் நடைபெற்ற 4 நாடாளுமன்றத் தோ்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நிலையான ஆட்சி அமைய முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், நான்கே ஆண்டுகளில் 5-ஆவது முறையாக கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 161-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றன.