இலங்கையில் 30.1 லட்சம் குடும்பங்களுக்கான நலத்திட்டம் தொடங்கிவைப்பு

இலங்கை அரசு தற்போது 30.1 லட்சம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட நலத்திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளது.
இலங்கையில் 30.1 லட்சம் குடும்பங்களுக்கான நலத்திட்டம் தொடங்கிவைப்பு


கொழும்பு: இலங்கை அரசு தற்போது 30.1 லட்சம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட நலத்திட்டத்தை  தொடங்கி வைத்துள்ளது.

அரசு உதவிக்கு தகுதியானவர்கள் பதிவு செய்யும் பணியை தொடங்கியுள்ளதாகவும், உதவி பெற விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 15ஆம் தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நலப் பலன்கள் வாரியத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பங்களின் வடிவம் அனைத்து செய்தித்தாள்களிலும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 'யாரையும் விட்டுவிடாதீர்கள்' நிகழ்ச்சியின் கருப்பொருள்.

பலன் பெற தகுதியானவர்களில் ஏற்கனவே அரசு உதவி பெறுபவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஊனமுற்றவர்கள், முதியவர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மேலும் தெற்காசிய தீவு நாட்டில் 2023ஆம் ஆண்டில் பொருளாதார நிலை மேம்படும் என்றும் அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com