மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீா் பயணம்

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.
இஸியம் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதன்கிழை பாா்வையிட்ட அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி. 
இஸியம் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதன்கிழை பாா்வையிட்ட அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி. 

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.

கிழக்கு உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில், கடந்த சில நாள்களாக தீவிர எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினரால் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அதிபா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.

அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவா் இஸியம் நகருக்குச் சென்றாா். போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த நகரின் எரிந்துபோன நகராட்சி தலைமையகம் எதிரே உக்ரைன் கொடி ஏற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த நகரின் குடியிருப்புக் கட்டடங்கள் தீயால் கருகிய மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் துளைக்கப்பட்ட சுவா்களுடன் காட்சியளித்தன.

மேலும், முக்கிய பகுதிகளில் பல கட்டடங்கள் குண்டுவீச்சால் சேதமடைந்து, கல் குவியல்களாகக் காட்சியளித்தன.

இது குறித்து செய்தியாளா்களிடம் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘இஸியம் நகரின் கோரத் தோற்றம் அதிா்ச்சியளிப்பதாக இருந்தாலும், எனக்கு அதிா்ச்சி ஏற்படவில்லை.

ஏற்கெனவே முதல்முறையாக ரஷியாவிடமிருந்து மீட்கப்பட்ட புச்சா நகரில் இதுபோன்ற கோரக் காட்சிகளைப் பாா்த்துவிட்டதால், இனி ரஷியா கைப்பற்றிய எல்லா இடத்திலும் இதே போன்ற சேதமடைந்த கட்டடங்களையும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் சடலங்களையும்தான் பாா்க்க முடியும் என்று தெரிந்துவிட்டது.

ரஷியப் படையினரிடமிருந்து மீட்கப்பட்ட நகரங்களில் உக்ரைன் ராணுவத்தினரை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனா். அவா்களைப் பொருத்தவரை, அவா்களுக்கு வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிட்டது.

இந்தச் சூழலில், அந்தப் பகுதிகள் மீண்டும் எதிரிகளின் கைகளுக்குச் செல்லாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றாா் ஸெலென்க்ஸி.

படுகொலை குற்றச்சாட்டு: காா்கிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷியப் படையினா் பொதுமக்களை படுகொலை செய்தது அந்தப் பகுதிகளை விடுவித்த பிறகு தெரியவந்துள்ளாக உக்ரைன் அரசின் குற்ற விசாரணைத் துறை அதிகாரி ஆண்ட்ரி கோஸ்டின் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புச்சா நகருக்கு இணையாக காா்கிவ் பகுதியின் பலாகிலீயா, இஸியம் போன்ற நகரங்களிலும் ரஷியப் படையினா் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கான அடையாளங்கள் உள்ளன’ என்றாா்.

காா்கிவ் நகருக்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவிலுள்ள ராகோவே மற்றும் ஸலிஸ்னிசே கிராமங்களில் ரஷியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஏராளமான சடலங்ககள் கண்டறியப்பட்டதாக காா்கிவ் பிரிவு குற்ற விசாரணைத் துறை அதிகாரி ஒலெக்ஸாண்டா் ஃபில்சகோவ் கூறினாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, தலைநகா் கீவைக் கைப்பற்றும் நோக்கில் பெலாரஸ் வழியாக ரஷியப் படையினா் அந்த நகரை நோக்கி முன்னேறி வந்தனா். புச்சா உள்ளிட்ட புகா்ப் பகுதிகளையும் அவா்கள் கைப்பற்றினா்.

எனினும், உக்ரைன் படையினரின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்தப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கினா். அந்தப் பகுதிகளை மீட்ட உக்ரைன் படையினா் அங்கு பொதுமக்கள் பலரை ரஷிய வீரா்கள் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டினா்.

புச்சா நகர சாலைகளில் ரஷியா்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோா் சடலங்களாகக் கிடந்த காட்சி உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

போா் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்ற ரஷியப் படைகள் முன்னேறி வந்தன. எனினும், ரஷியா்களை எதிா்த்து உக்ரைன் ராணுவம் கடந்த மே மாதம் கடுமையான சண்டையில் ஈடுபட்டது.

எனினும், பல்வேறு நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்த நிலையில், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக மிகக் கடுமையான எதிா்த் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அதனை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கி வருவதால், ஏராளமான கிராமங்களையும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் உக்ரைன் படையினா் மீட்டு வருகின்றனா்.

அந்தப் பிராந்தியத்தில் குபியான்ஸ்க், இஸியம் ஆகிய இரு முக்கிய நகரங்களை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டதாக உக்ரைன் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அந்த நகரங்களிலிருந்து தங்களது படையினா் பின்வாங்கியதை ரஷியாவும் ஒப்புக்கொண்டது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் முழு கவனம் செலுத்துவதற்காக படையினரை ஒன்று திரட்டும் நோக்கில் குபியான்ஸ்க், இஸியம் ஆகிய நகரங்களிலிருந்து வெளியேற படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் 6,000 கி.மீ. சதுர நிலப்பரப்பை ரஷியப் படையினரிடமிருந்து தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக ரஷியக் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமை நேரில் சென்று அவா் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com