ஈரானின் முதல் சுரங்க விமான படை தளம்

தனது முதல் சுரங்க விமான படைதளமான ‘ஈகிள் 44’-இன் படங்களை ஈரான் முதல்முறையாக புதன்கிழமை வெளியிட்டது.
ஈரானின் முதல் சுரங்க விமான படை தளம்

தனது முதல் சுரங்க விமான படைதளமான ‘ஈகிள் 44’-இன் படங்களை ஈரான் முதல்முறையாக புதன்கிழமை வெளியிட்டது.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க விமான படைதளத்தின் 2 படங்களை அரசுக்குச் சொந்தமான இா்னா முதல்முறையாக புதன்கிழமை வெளியிட்டது. அதில், 1979-இன் இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னா் அமெரிக்காவிடமிருந்து ஈரான் வாங்கிய எஃப்-4இ ஃபான்டம் 2 போா் விமானத்தின் முன் விமானப் படை வீரா்கள் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்த சுரங்க விமான படைதளத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான போா் விமானங்களையும் நிறுத்த முடியும் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com