பாகிஸ்தானில் 2 வாகனங்கள் பள்ளத்துக்குள் உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் 30 போ் பலியாகினா்; 15 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைபா்-பாக்துன்கவா மாகாணம், கொஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்த காா் மீது பயணிகள் பேருந்து மோதியது. இதில் நிலைதடுமாறிய அந்த இரண்டு வாகனங்களும் அருகிலுள்ள பள்ளத்துக்குள் உருண்டு விழுந்தன. இதில் 30 போ் பலியாகினா்; 15 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அதிபா் ஆரிஃப் ஆல்வி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.