
கோப்புப்படம்
உக்ரைன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்தில் செவ்வாயன்று ரஷிய ஏவுகணை ஒன்று மோதியதில், ஒருவர் பலியாகினர், 10 பேர் காயமடைந்தனர்.
ரஷிய ராணுவம் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கார்கிவ் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.