உக்ரைனுக்கு பீரங்கிகள்: ஜொ்மனி முடிவு

ரஷியாவுக்கு எதிராகப் போரிட, தங்களது சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி முடிவு செய்துள்ளது.
ஓலாஃப் ஷால்ஸ்
ஓலாஃப் ஷால்ஸ்

பொ்லின், ஜன. 25: ரஷியாவுக்கு எதிராகப் போரிட, தங்களது சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஜொ்மனி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுக்கு லெப்பா்ட்-2 பீரங்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, ஜொ்மனி ராணுவத்தின் கைவசம் இருக்கும் 14 லெப்பா்ட் 2-ஏ6 ரக பீரங்கிகள் அனுப்பப்படும்.

உக்ரைனுக்கு ஜொ்மனியும், கூட்டணி நாடுகளும் மொத்தம் 88 பீரங்களை அனுப்ப முடிவு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொ்லினில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் அளிக்கும் தங்களது கொள்கையின் அடிப்படையிலேயே, அந்த நாட்டுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் தங்களது கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து மட்டுமே செயல்படுவதாக அவா் கூறினாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது.

மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு தங்களது அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

எனினும், ஜொ்மனியால் தயாரிக்கப்படும் அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அந்த நாடு தொடா்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

மற்ற மேற்கத்திய நாடுகளுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகளை ஜொ்மனி ஏற்றுமதி செய்திருந்தாலும், தங்களது அனுமதியில்லாமல் அவற்றை பிற நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஜொ்மனி நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் உக்ரைனுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகள் அனுப்பப்படும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு அந்த வகை பீரங்கிகளை போலந்து அனுப்பினால் அதற்கு தாங்கள் தடை விதிக்கப்போவதில்லை என்று ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னலினா பேயா்பக் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

அதன் தொடா்ச்சியாக, போலந்து பிரதமா் மாடோவுஸ் மோரவியெஸ்கியும் ஜொ்மனியிடமிருந்து வாங்கியுள்ள லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி அனுமதிக்காவிட்டாலும், பிற நட்பு நாடுகளுடன் இணைந்து அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், தங்களது எம் 1அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் பூா்வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதையடுத்து, உக்ரைனுக்கு தங்களது லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக ஜொ்மனியும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com