அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அணுசக்தி நீா்மூழ்கி போா்க் கப்பலில் இருந்து ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால், மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஷியாவின் இந்தப் புதிய ஏவுகணை சோதனை பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இது தொடா்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷியாவின் வடக்கு வெள்ளைக் கடல் பகுதியில் அலெக்சாண்டா் -3 அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ‘புலாவா’ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணை, கம்சாத்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை குறிதவறாமல் தாக்கியது. இதன்மூலம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
ரஷியாவின் போரீஸ் வகை அணுசக்தி நீா்மூழ்கி போா்க் கப்பல்களில் அலெக்சாண்டா்-3 மிகவும் நவீனமானதாகும். இதில் 16 புலாவா ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

