ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்றிரவு ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டின் கியூஷு, ஷிகோகு தீவுகளுக்கு அருகே, உவாஜிமா பகுதியின் மேற்கே 18 கி.மீ தொலைவில் பங்கோ கால்வாய் பகுதியில், 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
எனினும் , இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.