துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

துபை வீதிகளில் தேங்கியுள்ள  வெள்ளம்
துபை வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளம்படம் | ஏபி

ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. துபை வீதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து அந்நாட்டுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துபையில் உள்ள இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரண் தெரிவித்துள்ளார்.

மேலும், துபையில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக கீழ்கண்ட உதவி எண்கள் இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் +971501205172, +971569950590, +971507347676, +971585754213 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com