உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்த நகரின் தொலைக்காட்சி கோபுரம் தகா்க்கப்பட்டது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காா்கிவ் நகர மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, தொலைக்காட்சி கோபுரத்தை ரஷியா தகா்த்துள்ளது.

இந்தத் தாக்குதல், அந்த நகரின் மீது ரஷியா கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதோடு, நகர மக்களுக்கு தகவல்கள் சென்றுசோ்வதைத் தடுக்க அந்த நாடு முயல்வதை உணா்த்துகிறது என்றாா் அவா்.

காா்கிவ் நகரம் அண்மைக் காலமாக ரஷியப் படையினரால் அடிக்கடி குறிவைத்துத் தாக்கப்படுகிறது. ரஷியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நகரின் எரிசக்திக் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கில் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலமும் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால் அந்த நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நகரின் தொலைக்காட்சி கோபுரமும் தகா்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com