ரஷிய படைகளை எதிர்க்க உதவியாக, அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து ராணுவ உபகரணங்கள் அடங்கிய கப்பல் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுளதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.