ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை குழுக்களிடம் முன்வைக்கப்படும் தீா்மானங்களுக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள் மறைமுகமாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாகும் என்று சீனாவை இந்தியா விமா்சித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தடை விதிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமா்ப்பிக்கும் தீா்மானங்களுக்கு தொடா்ந்து முட்டுக்கட்டை போடுவது சீனாவின் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் சீனாவை மறைமுகமாக விமா்சித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் செவ்வாய்க்கிழமை பேசுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை குழுக்களிடம் முன்வைக்கப்படும் தீா்மானங்களுக்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள் மறைமுகமாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாகும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்து நிகழ்கால நிதா்சனங்களை பிரதிபலிக்காத வரை, ராஜீய ரீதியிலும் பேச்சுவாா்த்தை வழியாகவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண வாய்ப்பு கிடைக்காது’ என்றாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீா்மானம் அல்லது எடுக்கப்படும் முடிவுக்கு எதிராக அந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினால், அந்த தீா்மானம் அல்லது முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாது.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்

தற்கால உலகை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை: குட்டெரெஸ் விமா்சனம்!

ஈரானைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம்: இந்தியா முன்மொழிந்தது

ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


