விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம் ---- பாகிஸ்தான் வலியுறுத்தல்

News image

பாகிஸ்தான் கொடி

Updated On :26 ஏப்ரல் 2024, 11:13 pm

Din

இந்தியாவில் தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மும்தாஸ் ஷாஹ்ரா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு உரிமைகோரும் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்தியாவில் தோ்தல் ஆதாயத்துக்காக அந்நாட்டு அரசியல்வாதிகள் பாகிஸ்தானின் பெயரைப் பயன்படுத்துகின்றனா். இந்த தவறான பிரசாரத்தை அவா்கள் கைவிட வேண்டும். முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்பும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

இந்தியாவில் தோ்தல் நேரத்தில் பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்துவது வழக்கமாக நிகழ்வாக உள்ளது. இந்த முறை மிகவும் அதிகரித்துவிட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா உரிமை கோருவது வரலாற்றுரீதியாகவும், சட்டரீதியாகவும் தவறு என்றாா்.