காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், போரை உடனடியாக தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் காஸா போரை நிறுத்தக் கோரி பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் முகங்களை துணியால் மூடிக்கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தாளாளர் சங்க வளாகத்தில் சாலையில் புரண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் காஸா போரை நிறுத்தக் கோரி பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.