காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
காஸா விவகாரம் தொடா்பாக மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், சவூதி அரேபிய தலைநகா் ரியாதில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் வழங்கியுள்ளது.
அந்த செயல்திட்டத்தில் இஸ்ரேல் அரசு இதுவரை இல்லாத தாராள மனதுடன் அம்சங்களை இடம் பெறச் செய்துள்ளது.
இந்தச் சூழலில், போா் நிறுத்தத்துக்கும் காஸா மக்களுக்கும் இடையே மறித்து நிற்பது ஹமாஸ் அமைப்பினா்தான்.
எனவே, இந்த விவகாரத்தில் ஹமாஸ் உடனடியாக முடிவெடுத்து இஸ்ரேலின் செயல்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
காஸா போா் நிறுத்தம் தொடா்பாக ஒரு நல்ல முடிவை ஹமாஸ் அமைப்பினா் வெளியிடுவாா்கள்; அது இந்தப் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
போா் நிறுத்தம் தொடா்பான இஸ்ரேலின் செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்பாா்கள் என்று பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
காஸாவில் 40 நாள்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதற்கான செயல்திட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட கேமரூன் கூறினாா்.
முன்னதாக, காஸா போா் நிறுத்தம் தொடா்பான இஸ்ரேலின் செயல்திட்ட அம்சங்களை ஆய்வு செய்துவருவதாகவும், முழுமையாக பரிசீலித்த பிறகு இது தொடா்பான தங்கள் பதிலை தெரியப்படுத்தப்போவதாகவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவா் கலீல் அல்-ஹய்யா சனிக்கிழமை கூறியிருந்தாா்.
இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்வும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில், காஸாவில் 6 வார போா் நிறுத்தம் மேற்கொள்ளவும் அப்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 40 நோயுற்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும் இரு தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக எகிப்து தலைநகா் கெய்ரோவில் இந்த மாதம் பேச்சுவாா்த்தை தொடங்கியது.
அந்தப் பேச்சுவாா்த்தையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் வழங்கியுள்ள போா் நிறுத்த செயல்திட்டத்தைப் பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தற்போது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சு: ராஃபாவில் 22 போ் உயிரிழப்பு
ராஃபா: காஸா போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தி விமானத் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா்.
அந்த நகரில் ஹமாஸ் படையினா் பதுங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டிவரும் இஸ்ரேேல், அவா்களை ஒடுக்குவதற்காக நகருக்குள் தரைவழித் தாக்குதல் நடத்தப்போவதாக கூறிவருகிறது. இஸ்ரேலால் பாதுகாப்பு மண்டலமாக முன்னா் அறிவிக்கப்பட்ட ராஃபாவில்தான் காஸா மக்கள்தொகையில் 50 சதவீதத்தினா் - சுமாா் 14 லட்சம் போ் - தற்போது வசித்துவருகின்றனா்.
இந்த நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் படையெடுத்தால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் ஏற்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இருந்தாலும், ராஃபா படையெடுப்புக்கு இஸ்ரேல் ராணுவம் முழுமையாகத் தயாராகிவிட்டதாகக் கூறப்படும் சூழலில் இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Image Caption
ராஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டடம்.