அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் பச்சிளங்குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் தொடங்கி மிசௌரி வரை கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூறைக்காற்றுடன் கூடிய புயல் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ஒக்லஹோமா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டென்வில்லேவில் இருவர் மரைட்டாவில் ஒருவர் மற்றும் சர்ரே கவுண்டியில் உள்ள முர்ரே நகரில் ஒருவர் என புயல் பாதிப்பால் மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களும் பலத்த சேதமடைந்துள்ளதக ஒக்லஹோமா அவசரகால மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.