பாகிஸ்தானில் ஆட்சியமைக்கப் போவது யார்? 

பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தோ்தலில் எ்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
இம்ரான் கான் பிடிஐ கட்சி  ஆதரவாளா்கள்.
இம்ரான் கான் பிடிஐ கட்சி  ஆதரவாளா்கள்.


பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 266 இடங்களுக்கு இதுவரை, 250 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 99 இடங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாகிஸ்தானில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சோ்ந்து ஆட்சியமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களிலும், மற்ற இடங்களில் சிறிய கட்சியும் மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் பிடிஐ  ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்களே முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சில இடங்தளில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

பாகிஸ்தானில் முந்தைய தோ்தல்களுக்குப் பிறகு நடந்ததைப் போல சிறிய கட்சிகள் அணி தாவுவது, எம்.பி.க்கள் விலைக்கு வாங்கப்படுவது போன்றவை மூலம் காட்சிகள் வேகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இந்த முறையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும், பிடிஐ ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் சுயேச்சைகள் என்பதால் அவா்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு உள்பட்டவா்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள், எந்தக் கட்சியிலும் சேரலாம், இது  ஸ்திரத்தன்மைக்கான சாத்தியமான ஆதாரமாகும், ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆதரவில் இருந்து விலகிக்கொள்ளலாம். 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானை நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில், கூட்டணி அரசு அமைக்க பிற கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியுடன் கைகோக்க வேண்டும் என்றாா் நவாஸ் ஷெரீப். கூட்டணி அரசை அமைப்பதற்கான ஆலோசனைகளைத் தொடங்குவதாக அறிவித்தார், ஆனால் எதிர்கால அமைப்பிற்கான வடிவம் வருவதற்கு பல நாட்கள் ஆகலாம் என தெரிவித்தார்.

மேலும் ‘சண்டையிடும் மனநிலையில் உள்ளவா்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இந்தச் சண்டையை பாகிஸ்தானால் தாங்க முடியாது. இது பாகிஸ்தானிகளின் வாழ்க்கை பிரச்னை என்பதால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவவேண்டும். இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை வளா்க்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று கூறிவந்த நவாஸ்,  இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளாா்.

எனினும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மூத்த தலைவா் கோஹா் கான் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி பிரதமர் பதவிக்கு வேட்பாளராக இருப்பார் என்று அந்த கட்சி அறிவித்தது, அதேசமயம் ஷெரீப் நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்க ஆர்வமாக உள்ளார். 

ஆதரவு பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதை முடிவு செய்ய பிடிஐ தலைமை சனிக்கிழமை முதல் உள்கட்சி ஆலோசனையைத் தொடங்க உள்ளது.

இம்ரான் கான் கட்சியால் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், இருக்கும் இடங்களை வைத்துக்கொண்டு மற்ற சிறிய கட்சியில் சேர்ந்து அரசு அமைப்பதற்கான மிகப்பெரிய கட்சியாக மாறி, ஷெரீப்பின் வேண்டுகோளை எதிர்கொள்ளலாம் என்றும், சுயேச்சைகள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வரை சில நாள்களுக்கு நிலைமை சீராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இது பணமில்லா தேசத்தில் கடினமான முடிவுகளை எடுப்பதற்கு ஒரு ஒருங்கிணைந்த சக்தியை வழங்குவதை விட நாட்டிற்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாக தெரிகிறது. 

இந்தத் தோ்தலில் இம்ரான் கான் கட்சியின் கை ஓங்கியிருந்தாலும் பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com