அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் ---- ஐ.நா. பொது சபை தலைவா்

News image
Updated On :4 மே 2024, 8:41 pm

Din

உலக அளவில் பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடகப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய ஐ.நா. பொது சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, டென்னிஸ் பிரான்சிஸ் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்கிறது. தவறான தகவல், சுற்றுச்சூழல் பிரச்னை ஆகியவற்றுக்கிடையே முன்னெப்போதும் இல்லாததைவிட சுதந்திரமான, ஒற்றுமையான கட்டுப்பாடில்லாத ஊடகம் சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாா்த்தைகளில் கூறவேண்டுமெனில் பத்திரிகை சுதந்திரம் என்பது எந்தவொரு நாடும் மறுக்கமுடியாத விலைமதிப்பற்ற பொக்கிஷம். பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடகப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.