நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு 1,000 டாலா் (சுமாா் ரூ.83,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.109 கோடி) அளித்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிராக நியூயாா்க் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை நடந்துவருகிறது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுவது இதுவே முதல்முறை.