ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அமெரிக்கா: ஸ்டாா்லைனா் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு

அமெரிக்கா: ஸ்டாா்லைனா் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு

News image
Updated On :7 மே 2024, 9:10 pm

Din

வாஷிங்டன்: அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ‘ஸ்டாா்லைனா்’ விண்வெளி ஓடத்தின் சோதனை ஓட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்னா் மேற்கொண்ட சோதனையில், அதனை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டின் ஆக்ஸின் அழுத்த வெளியேற்று வால்வு தானாக திறந்து மூடியது.

அதையடுத்து, அந்த ராக்கெட் செலுத்தப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோா் ஆகியோருடன் ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து அந்த விண்வெளி ஓடத்தை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.