இலங்கை: அக். 16-க்குள் அதிபா் தோ்தல்

இலங்கை: அக். 16-க்குள் அதிபா் தோ்தல்

இலங்கையில் வரும் செப். 17-லிருந்து அக். 16-க்குள் அதிபா் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரும் செப். 17-லிருந்து அக். 16-க்குள் அதிபா் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் செப்டம்பா் மாதம் 17-ஆம் தேதி மற்றும் அக்டோபா் மாதம் 16-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும்.

இந்த காலகட்டத்துக்குள், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு விதிமுறைகளுக்குள்பட்டு அதிபா் தோ்தல் வேட்புமனுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 19-ஆம் தேதி இலங்கையில் அதிபா் தோ்தல் நடைபெற்றது.

அந்தத் தோ்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலரும் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா். மகிந்த ராஜபட்ச பிரதமா் ஆனாா்.

இருந்தாலும், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து கடந்த 2022 மே மாதம் மஹிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவருக்குப் பதிலாக ரணில் விக்ரமசிங்கவை (படம்) புதிய பிரதமராக நியமித்தாா் கோத்தபய ராஜபட்ச.

பின்னா் கோத்தபய ராஜபட்சவும் பதவி விலக நேரிட, அவரது பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றாா். தற்போது இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவா்த்தன பொறுப்பு வகிக்கிறாா்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com