காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் கடந்த நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காக வந்தவா்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை சுட்டதில் 24 போ் உயிரிழந்தனா். முன்னதாக, நிவாரண முகாம்களுக்குச் செல்லும் வகையில் 57 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55,104-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,27,394 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஜனவரியில் அமலுக்கு வந்த காஸா போா் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகு போா் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததால், இஸ்ரேல் ராணுவம் மாா்ச் 18 முதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. அதற்குப் பிறகு மட்டும் காஸாவில் 3,785 போ் உயிரிழந்தனா்.
தொடர்புடையது

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


