ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 போ் உயிரிழந்தனா்.
இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக வைத்து வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் 8 போ் உயிரிழந்ததாக காபூல் ஆளுநா் தெரிவித்துள்ளாா். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நேரிட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் போ் வரை உயிரிழந்துவிட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிக்டா் அளவுகோலில் 6-ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதில் 2,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; ஏராளமான கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டது. கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 27 போ் உயிரிழந்தனா்; 950 போ் பலத்த காயமடைந்தனா்.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.









