தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,807 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 75 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 94,049 ஆக உயர்ந்துள்ளது.
இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 2,182 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 63 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 37 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 26 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 1,264 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், இன்று அதிகபட்சமாக 2,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,926 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 39,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 31,521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,47,193 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 48 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 91 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து 7-ஆவது நாளாக, ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.