கர்நாடக திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஏப். 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில செய்தித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடக அரசு சார்பில் கன்னட திரையுலகின் சிறந்த படைப்புகளுக்கு 1966-ஆம் ஆண்டு முதல் வீரேந்திரப்பாட்டீல் முதல்வராக இருந்த போது தொடங்கி, தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2016-17-ஆம் ஆண்டுக்கான விருதுகளை முதல்வர் சித்தராமையா அண்மையில் அறிவித்தார். கடந்தாண்டு திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு நடிகர் ராஜ்குமார் பிறந்த நாளின் போது, மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதன்படி, ஏப். 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் வசந்தநகரில் உள்ள அம்பேத்கர் பவனில் மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது.
விருதுகளை முதல்வர் சித்தராமையா வழங்கி கெüரவிக்கிறார். அமைச்சர் ரோஷன்பெய்க் தலைமை வகிக்கிறார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் ஜி.பத்மாவதி, சட்ட மேலவை உறுப்பினர்கள் கோவிந்தராஜ், டி.ஏ.சரவணா, ஜெயமாலா, தாரா அனுராதா உள்பட பலர் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.