இன்று கண்ணதாசன் நினைவு சொற்பொழிவு

திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) தேதி கவியரசு கண்ணதாசன் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.

திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) தேதி கவியரசு கண்ணதாசன் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுவர் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள கவியரசு கண்ணதாசன் நினைவு அறக்கட்டளை சார்பில், பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சிறுமலர் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. விழாவுக்கு சங்கத் தலைவர் ப.இளவழகன் தலைமை வகிக்க, வே.அரசு முன்னிலை வகிக்க, சங்கச் செயலர் ம.சி.மணி வரவேற்புரை ஆற்றுகிறார். 'கதைகள் சொல்லும் கண்ணதாசன் பாடல்கள்' என்ற தலைப்பில் பாவலர் கண்ணதாசன் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com