இரு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி

பெங்களூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சூர்யாநகர் காவல் சரகம்: பெங்களூரு ஊரகம், நெரலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்யாதவ் (45). இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பழைய சந்தாபுரா அருகே வேகமாக வந்த லாரி மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.
மடிவாளா காவல் சரகம்: பெங்களூரு ஸ்ரீரங்கந்தகாவலுவைச் சேர்ந்தவர் நாகராஜ் (21). தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்த இவர், வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில் ஸ்கூட்டரில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது கண்டீருவா படப் பிடிப்புத் தளம் அருகே வேகமாக வந்த லாரி மோதியது.இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com