"ஆயுர்வேத மருத்துவ முறை சிறந்தது'

உடல் நலத்தைப் பாதுகாப்பதில் ஆயுர்வேத மருத்துவ முறை சிறந்து விளங்குகிறது என்று இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

உடல் நலத்தைப் பாதுகாப்பதில் ஆயுர்வேத மருத்துவ முறை சிறந்து விளங்குகிறது என்று இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், வேதா அர்த் மையத்தைத் தொடங்கிவைத்து அவர் பேசியது: -
இந்தியர்களால் உருவாக்கப்பட்டது ஆயுர்வேத மருத்துவ முறை.  ஆங்கிலேயர் வருகையால் இந்தியாவில் ஆலோபதி மருத்துவ முறை அறியப்பட்டு,  அந்தச் சிகிச்சையைப் பெற்று வருகிறோம்.
பக்க விளைவுகள் இல்லாத ஆயுர்வேத சிகிச்சை முறைக்கு தற்போது மக்கள் மாறி வருகின்றனர். குறிப்பாக நகரங்களில் வசிக்கும் மக்கள் ஆயுர்வேத மருத்துவ முறைக்கு மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மருத்துவ முறைகளை ஒப்பிடுகையில் ஆயுர்வேத சிகிச்சை முறை சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் வேதா அர்த் மைய நிறுவனர் திவ்யா தினேஷ்  உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com