பாஜக மேலிடம் இடும் உத்தரவுக்கு கட்டுப்படுவேன் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் மகனும், சிகாரிபுரா தொகுதி எம்எல்ஏவுமான பி.ஒய்.ராகவேந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தான் முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். நான் (ராகவேந்திரா) மீண்டும் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவதை விரும்புகிறேன். இருந்தாலும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு கூறினால், அவர்களின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன். கட்சியின் சாதாரண தொண்டனான, கட்சியின் கட்டளையை ஏற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.