பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ராகுல்குமார் (24), மாரத்தள்ளியைச் சேர்ந்த ராம்தின் ஜாதவ் (28), ஷியாம்குமார் யாதவ் (21), கல்யாண்நகரைச் சேர்ந்த முகமது அஷேரப் (25), கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனேஷ் (23), ஷப்பு (23). இவர்கள் 7 பேரும் மைக்கோ லேஅவுட் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் 7 பேரையும் கைது செய்து, 22 கிலோ 200 கிராம் கஞ்சா, 100 கிராம் சிரஸை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மைக்கோ லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.