பெங்ளூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கோளரங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் அக்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மாணவர்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. 40 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த பயிலரங்கத்தில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் கலந்துகொள்ளலாம். இந்த பயிலரங்கில் காப்புவிதி குறித்துபயிற்சி அளிக்கப்படும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.taralaya.org என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.