ஒயிட்பீல்டு, கெங்கேரியில் ரயில்கள் நிறுத்தம்

ஒயிட்பீல்டு, கெங்கேரி ரயில் நிலையங்களில் சோதனை முயற்சியாக ரயில்கள் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஒயிட்பீல்டு, கெங்கேரி ரயில் நிலையங்களில் சோதனை முயற்சியாக ரயில்கள் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண்-16315/16316-பெங்களூரு-கொச்சுவேலி-பெங்களூரு விரைவுரயில் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திலும், ரயில் எண்-12613/12614-மைசூரு-பெங்களூரு-மைசூரு திப்பு விரைவு ரயில் கெங்கேரி ரயில் நிலையத்திலும் அக்.19 முதல் அடுத்த ஆண்டு ஏப்.18-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு சோதனைமுயற்சியாக நின்று செல்லும்.
ரயில் எண்-16315-பெங்களூரு-கொச்சுவேலி விரைவுரயில் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திற்கு தினமும் மாலை 5.34 மணிக்கு வந்து, மாலை 5.35 மணிக்குப் புறப்பட்டு செல்லும். ரயில் எண்-16316-கொச்சுவேலி-பெங்களூரு விரைவுரயில் ஒயில்பீல்டு ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 7.16 மணி வந்து, காலை 7.27 மணிக்குப் புறப்படும்.
ரயில் எண்-12613-மைசூரு-பெங்களூரு திப்பு விரைவுரயில் கெங்கேரி ரயில் நிலையத்தில் நண்பகல் 1.34 மணிக்கு வந்து, நண்பகல் 1.35 மணிக்குப் புறப்படும். ரயில் எண்-12614-பெங்களூரு-மைசூரு திப்பு விரைவு ரயில் கெங்கேரி ரயில் நிலையத்திற்கு தினமும் மாலை 3.17 மணிக்கு வந்து, மாலை 3.18 மணிக்குப் புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com