குற்றவாளியைப் பிடிக்க முயன்ற காவலருக்கு கத்திக் குத்து

திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவரை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து விழுந்தது.

திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவரை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து விழுந்தது.

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் அலாவுதீன் (23). இவர் திருட்டு, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த, முகமது அலி (29),  பெங்களூரு யஸ்வந்தபுரம் ஷெரீப்நகரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை மாலை அங்குச் சென்ற அலாவுதீன், தப்பியோட முயன்ற முகமது அலியைப் பிடிக்க முயன்றார்.
அப்போது கத்தியால், அலாவுதீனை குத்திவிட்டு முகமது அலி தப்பினார். காயமடைந்த அலாவுதீன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து யஸ்வந்தபுரா போலீஸார் வழக்கு பதிந்து, முகமது அலியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com