பெங்களூரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பகல்குன்டே பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ் (25), வித்யாரண்யபுரா ராகவேந்திரா காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20), மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஹாரீப் (20) உள்பட 5 பேர் வித்யாரண்யபுரா மிஷன் சதுக்கத்திலிருந்து ராணுவ லேஅவுட்டிற்கு செல்லும் சாலையில் தேவமாதா பூங்கா அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்குச் சென்று தேஜஸ், லோகேஷ், ஹாரீப் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பினர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரும்பு கம்பி, விக்கெட் ஸ்டெம்ப், மிளகாய்ப்பொடி பொட்டலம், 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வித்யாரண்யபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.