லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டம், மனிநால்கூரு கிராமத்தைச் சேர்ந்தவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். குடிநீர் இணைப்புக்கு அனுமதி அளிக்க ரூ.ஆயிரம் லஞ்சமாக தருமாறு கிராம நிர்வாக அலுவலர் நஞ்சுண்டையா கேட்டாராம்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பயனாளி புகார் தெரிவித்தார். போலீஸாரின் அறிவுரையின் பேரில், வியாழக்கிழமை கிராம நிர்வாக அலுவலரிடம் ரூ. ஆயிரம் லஞ்சமாக தரும் போது, மறைந்திருந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com