விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்கி வருகிறது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.

News image

விழாவில் மருத்துவத் துறையில் சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதை சென்னை மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸþக்கு வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், (இடமிருந்து) கூட்டமைப

Updated On :9 அக்டோபர் 2016, 3:45 am IST

இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்கி வருகிறது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும்

தென்னந்திய நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நிர்மலா சீதாராமன் பேசியது:
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் வர்த்தகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய ஏற்றுமதிக்கான ஒற்றைச்

சாளர முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பல மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த முறையின் கீழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான உரிமம், வெளிநாட்டில் வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி

நிறுவனங்கள் ஒற்றைசாளர முறையில் பெற்றுகொள்ள முடியும்.
இந்த முறையில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தச் சிக்கல்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு வர ஏற்றுமதியாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

அப்போதுதான் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும் என்றார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் ரல்ஹான், முன்னாள் தலைவர் ரஃபீக் அகமது, மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.