செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாட்டி, பேத்தி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த ஆப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவரது பேத்தி அருணா (18). தனியார் நிறுவன ஊழியரான இவர், இரவு பணி முடிந்து நிறுவனத்தின் வாகனத்தில் வந்து இறங்குவாராம். அருணாவுக்காக ஆப்பூர் சாலை அருகில் மீனா காத்திருந்து, அவர் வந்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவரும் வீட்டுக்குச் செல்ல சாலையைக் கடந்தனர். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மீனாவும், அருணாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பாலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.