மதுராந்தகத்தை அடுத்த பொலம்பாக்கம் ஸ்ரீ சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞர் கவன ஈர்ப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அ.சண்முகம் தலைமை வகித்தார். கல்லூரி மேலாளர் குருநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர்.