20 சதவீதம் இடைக்கால நிவாரணம்: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்ற பேரவைக்
செங்கல்பட்டில் நடைபெற்ற மாவட்ட ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.
செங்கல்பட்டில் நடைபெற்ற மாவட்ட ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமை வகித்தார். செங்கல்பட்டு வட்டத் தலைவர் வேதகிரி வரவேற்றார். பொதுச் செயலாளர் கே.ராகவன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ய.சீத்தாராமன் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.லெனின் வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.சுகுமாரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஓய்வூதிய மாற்றத்தினை உடனடியாக முழு பணப் பயனுடன் 1.1.2016 முதல் அமல் படுத்தவேண்டும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்கள் அனைவருக்கும் உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.ஜெகதீசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com