மதுராந்தகம் அருகே நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்ததால் வேதனையடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). விவசாயியான இவர், தனது உறவினருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். இந்நிலையில் வறட்சி காரணமாக, பயிர்கள் காய்ந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலத்தைப் பார்வையிட்ட சந்திரசேகர் வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டுக்கு வந்த அவர், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்த சந்திரசேகருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.