குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பென்னலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகில் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பென்னலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகில் விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொண்டு நிறுவனத்தின் முதன்மை மேலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். இதில், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் நிறுவனத்தின் திட்ட மேலாளர் நம்பிராஜ், துணை திட்ட மேலாளர்கள் சுரேஷ்குமார், வெங்கடேசன் மற்றும் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருபாகரன், சரவணன், அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com