பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மகான்யம் அரசுப் பள்ளி 5-ஆவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மாகான்யம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாகான்யம், மலைப்பட்டு, அழகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், மாகான்யம் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதிய 39 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து 5-ஆவது முறையாக 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளது.